ADVERTISEMENT
ADVERTISEMENT
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 504 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 495 பேர் சிகிச்சை பெற்று, முழு உடல்நலம் பெற்றுள்ளனர். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது 5 பேர் மட்டுமே கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை தொற்றுக்கு புதிதாக 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவலை சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
Show comments