ADVERTISEMENT

சென்னையில் 2 நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து!

06:03 PM Apr 06, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை - திருத்தணி மார்க்கத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வியாசர்பாடி - ஆவடி இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன. நாளை காலை 9.50 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன. நாளை மறுநாள் காலை 9.50 மணி முதல் மாலை 4.20 மணி வரை ரயில்சேவை ரத்து ஆகின்றன.

இதே போல் சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவ்வப்போது சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT