ADVERTISEMENT
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நங்கவள்ளி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், இடைப்பாடி அருகே உள்ள பக்கநாடு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் செல்வராஜ் (வயது 24) என்ற இளைஞர்தான் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து செல்வராஜை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments