கோவை கடைவீதி பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் சுரேஷ், இவரிடம் பணியாற்றுபவர் ராமமூர்த்தி இவர் சுரேஷிடம் இருந்து 106 சவரன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு தாராபுரத்தில் உள்ள நகை கடைக்கு கொடுப்பதற்காக சென்றுள்ளார். காந்திபுரம் நோக்கி ராம் நகர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஒருவர் வேண்டுமென்றே அவரது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அந்த இரு சக்கர வாகனத்தில் பின்பக்கம் இருந்தவர் கீழே விழுந்தவரை காப்பாற்றுவது போல் இறங்கி அவருக்கு உதவி புரிந்துள்ளார்.
ஆசுவாசப் படுத்த அழைத்துச் செல்வது போல் நைசாக அவரது கைப்பையை விபத்து ஏற்படுத்தியவர் கையிலேயே வைத்திருக்க முயற்சி செய்தார். இருப்பினும் அதனை உணரந்த ராமமூர்த்தி கைப்பையை உடனடியாக பெற்றுக்கொண்டார். இருப்பினும் சிறிது நேரம் கழித்து அவரிடம் இருந்து அதேபோல கைப்பையை நைசாக எடுத்துக்கு கொண்ட கொள்ளையன் ஹெல்மெட்டையும் கையில் பிடித்துக் கொண்டு அவரை கைத்தாங்கலாக ஒரு கடையின் வாயிலில் அமர வைக்க முயற்சி செய்தான். அப்படியே கூட்டத்தில் இருந்து நகை பையை சப்தமின்றி நைசாக தூக்கிக்கொண்டு வெளியே அவனுக்காக காத்துகொண்டு இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பித்தான். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.