ADVERTISEMENT
ADVERTISEMENT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. படிப்பில் சேருவதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குலசேகரம் சாரதாகிருஷ்ணா, ஒயிட்மெமோரியல் ஓமியோபதி கல்லூரிகளில் சேர விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் நவம்பர் 27- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணி வரையும், பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்ப படிவம் சமர்பிக்க கடைசி நாள் நவம்பர் 30- ஆம் தேதி அன்று மாலை 05.30 வரையும் வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. இது தொடர்பான மேலும் www.tnhealth.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
Show comments