ADVERTISEMENT

இறந்து போன எனது மனைவியின் ஓட்டை போட்டது யாா்? கன்னியாகுமரியில் பரபரப்பு...

03:42 PM Apr 18, 2019 | manikandan

கன்னியாகுமாி தொகுதியில் காலையில் மந்தமாக காணப்பட்ட வாக்கு பதிவு போக போக சூடு பிடித்தது. இந்த நிலையில் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழகியமண்டபம் பிலாவிளை 157 ஆவது வாக்கு சாவடியில் கல்லுவிளையை சோ்ந்த அஜின் ஓட்டு போட சென்றாா். பூத் ஸ்லிப்பை வாங்கி பாா்த்த தோ்தல் அதிகாாி, உங்க ஓட்டு ஏற்கனவே போடப்பட்டுள்ளது. நீங்க ஏற்கனவே வந்து போட்டுவிட்டீா்கள் என கூறியுள்ளார். அதற்கு அஜின் தனது கை விரலை காட்டி நான் இப்போது தான் ஓட்டு போட வந்தேன் என்று கூறி வாக்கு வாதம் செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த நிலையில் அஜின் உடனே எனது மனைவி விஜி ஓட்டு போட்டாரா? என்று அதிகாாிகளிடம் கேட்டாா். உடனே அவா்கள் அங்கிருந்த சீட்டை சாிபாா்த்து விஜி ஓட்டு போட்டு அரை மணி நேரம் ஆகுது என்றனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த அஜின், என் மனைவி இறந்து 7 வருடம் ஆகுது. அவள் வந்து எப்படி ஓட்டு போட்டாள் என்று கேட்டதும் அங்கிருந்த அதிகாாிகளுக்கு அதிா்ந்து போயினர். இதை கேட்ட மற்ற வாக்காளா்களும் இந்த பூத் கள்ள ஓட்டுக்காக அமைக்கப்பட்டதா? என கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT