Skip to main content

மோடியின் ஒருநாள் பேரணிக்காக வீணாக்கப்பட்ட 1.4 லட்சம் லிட்டர் தண்ணீர்...

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும்  பிரதமர் மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்கு முன்பாக நேற்று வாரணாசியில் பிரம்மாணட பேரணி ஒன்றை நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த பேரணியாக சுமார் 1.4 லட்சம் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1.4 lakh liter water wasted for modi roadshow in varanasi

 

 

மோடி நடந்து செல்லும் சாலை அதன் தடுப்பு சுவர்கள், சுற்றுவட்டார பகுதிகளை சுத்தமா செய்வதற்காக இவ்வளவு நீர் வீணாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை விநியோகத்திற்காக உள்ள மேல்நிலை தொட்டிகள் மற்றும் வேறு நீர்மூலங்களில் உள்ள நீர் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனால் அப்ப்குதியில் வசிக்கும் 30சதவீத மக்களுக்கு அடிப்படை தேவைக்கே நீர் கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. சுமார் 400 பணியாளர்களால் 1.4 லட்சம் லிட்டர் நீரை கொண்டு பாதையை சுத்தம் செய்த இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்