ADVERTISEMENT

இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் துணை வேந்தர் நியமன மசோதா 

08:19 AM Apr 26, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதுவரை, கவர்னர் நியமிக்கும் மூன்று பேர் கொண்ட தேடுதல் குழுவின் பரிந்துரையின் பேரில் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுவந்த நிலையில், இந்த மசோதா அதனை மாற்ற வழிவகை செய்யும். இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யமுடியும்.

இந்த நிலையில், நேற்று நிறைவேற்றப்பட்ட துணை வேந்தர் நியமன மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT