ADVERTISEMENT
ADVERTISEMENT
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உள்பட அக்கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த, பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Show comments