ADVERTISEMENT

திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு கேட்டு ஏ.கே. போஸ் மனைவி, மகன்கள் விருப்பமனு

04:13 PM Apr 22, 2019 | rajavel





திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஏ.கே. போஸ் மனைவி மற்றும் மகன்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

வரும் மே மாதம் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT





அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஏ.கே. போஸ் மறைவை தொடர்ந்து அந்த இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏ.கே. போஸ் மனைவி பாக்கிய லெட்சுமி மற்றும் மகன்கள் என 3 பேரும் மனு கொடுத்தனர். மேலும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கமும் மனு கொடுத்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் சரவணன், அமமுக சார்பில் மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT