அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேனி மாவட்டத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதை 20 வருடங்களாக பிராட் கேஜ் பாதையாக மாற்றப்படாமலே உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கியும், பல காண்ட்ராக்டர்களிடம் இந்தப்பணிகள் ஒப்படைக்கப்பட்டும் இன்னும் பணிகள் நிறைவேறாமல் இருக்கக் காரணம், தேனியைச் சேர்ந்த அமைச்சர்தான். எனக்குத் தெரிந்த ஆந்திரா காண்ட்ராக்டர் கூறும்போது, தேனி அமைச்சர் 30 சதவீதம் கமிஷன் கேட்கிறார் என்றார். அதனால் தான் தேனி மாவட்டம் ரயில் இல்லா மாவட்டமாக உள்ளது.
நான் தேனி எம்.பி ஆனால், 6மாதத்தில் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு தேனிக்கு ரயில் வரவழைப்பேன்" என்றார். தேனி அமைச்சர் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மறைமுகமாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். சிலர் பிஞ்சிலே பழுத்தது போல இருக்கிறார்கள். நான் மரத்திலேயே பழுத்து கனிந்தவன் என மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரைத் தாக்கிப் பேசினார். நீங்கள் தேனிக்குப் புதுமுகமாக இருக்கிறீர்களே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நடிகனாக இருந்தால் என்னை புதுமுகம் எனலாம். நான் தேனிக்கு பழைய முகம்தான் என்று கூறினார்.