ADVERTISEMENT

"எம்.பி. பதவி கேட்டு முதல்வரை சந்திக்க உள்ளோம்"- தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்!

10:18 PM Feb 27, 2020 | santhoshb@nakk…

தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. திமுக மற்றும் அதிமுகவில் தலா 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு இரண்டு நாட்களில் முதல்வரை சந்திக்க உள்ளோம். சிஏஏ நாட்டிற்கு நலன் என்றால் வரவேற்போம்; பாதிப்பு என்றால் எதிர்த்து குரல் கொடுப்போம். எந்த மதத்திற்கும் சிஏஏ எதிரானது அல்ல என்று மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT