ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று திமுக ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் யார் என்பது குறித்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Show comments