கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள தமிழாற்றுப்படை என்ற ஆராய்ச்சிக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
ADVERTISEMENT
இந்த நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார். அதே மேடையில் தமிழாற்றுப்படையின் ஒலிப் புத்தகமும் வெளியிடப்படுகிறது. 12 மணி நேரம் ஓடும் அந்த ஒலிப் புத்தகத்தை கவிஞர் வைரமுத்து தன் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளார். இதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிடுகிறார். ஓய்வு பெற்ற நீதிபதி விமலா பெற்றுக்கொள்கிறார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments