ADVERTISEMENT

“சசிகலா செய்த தவறே தற்போதைய நிலைக்கு காரணம்..” - புகழேந்தி 

11:15 AM Aug 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி கடந்த ஆண்டு செப். 1ம் தேதி காலமானார். அவரது முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர் புகழேந்தி நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்திற்கு நேரில் சென்று விஜயலட்சுமி உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எடப்பாடி பழனிச்சாமி ஒரு போதும் அதிமுகவின் மன்னனாக மகுடம் சூட முடியாது. எடப்பாடி பழனிச்சாமி உடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரை தவறாக வழிநடத்தி செல்கின்றனர். அதிமுக கட்சி, மற்றும் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது என்றால் அதற்கு காரணம் கே.பி. முனுசாமி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ததுதான் இப்போதைய அரசியல் மாற்றத்திற்கு காரணம். அவர் இதை பலமுறை என்னிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது உறுதி. அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள். அதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நடைபெற்றுள்ளது.

தேர்தலின் போது அவசர அவசரமாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தற்காலிகம் என்று கூறி தென்மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டதால் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தான். இரட்டை இலை முடங்கினாலும் கட்சியே போனாலும் பரவாயில்லை சுயேட்சையாக நின்று எடப்பாடி பழனிச்சாமி வரும் தேர்தலை சந்திக்க திட்டம் தீட்டி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை மீட்டெடுத்து வழி நடத்துவார். துரோகத்தின் உச்சம் அடைந்த எடப்பாடியிடம் இருப்பவர்கள், எடப்பாடிக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது” என்றார்.


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு விஷயம் செய்தித்தாள்களில் கசிவு குறித்து கேட்டபோது, “துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் மற்றும் சில உயர் அதிகாரிகள் இதில் கைது செய்யப்பட வேண்டும். இதுபோன்று கொடநாடு வழக்கு, ஊழல் வழக்கு அனைத்து விஷயமும் கசியத் தான் செய்யும்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT