Skip to main content

எடப்பாடி கேட்ட ஒரு கேள்வி...வெளியேறிய கட்சி!

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஜூன் 28ஆம் தேதியில் இருந்து  சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர்.
 

admk



இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேகதாது அணை கட்டுவோம் என ராகுல்காந்தி கூறியதற்கு காங்கிரஸ் திமுக கூட்டணியின் நிலைப்பாடு என்ன, மேலும் மேகதாது அணை கட்டுவோம் என ராகுல்காந்தி கூறியதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை  என்பதை தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி காங்கிரஸ் எம்.ல்.ஏக்களை நோக்கி கேள்வி எழுப்பினார். முதல்வர் கேட்ட கேள்விக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று விளக்கமளிக்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சார்ந்த செய்திகள்