ADVERTISEMENT

நீங்களெல்லாம் கண்டிப்பாக வரவேண்டும்... அமைச்சர்களால் டென்ஷனில் மோடி... பயத்தில் மத்திய அமைச்சர்கள்!

12:17 PM Apr 21, 2020 | Anonymous (not verified)


மோடிக்கு அவரோட அமைச்சர்கள் சைடிலிருந்து தலைவலி ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் பலரும் தற்போது தங்களின் அலுவலகத்துக்கு வரவே பயப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் மத்திய அமைச்சர்கள் எல்லோரும், வீட்டுக்குள் முடங்கிடாமல், அவங்கவங்களும் தங்கள் அலுவலகத்து வந்து பணிகளைக் கவனிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவு போட்டுள்ளார். ஆனால் பாடகி சுனிதா கபூர், லண்டனில் இருந்து கரோனா தொற்றை வாங்கி வந்து, இங்கிருக்கும் எம்.பி.க்களுக்கு பரப்பிய விவகாரத்தால், அமைச்சர்கள் பலரும் தங்கள் அலுவலகத்தில் நுழையவே பயப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT



அதனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் மே 3-ந் தேதி வரை வீட்டிலிருந்தபடியே செயல்படுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் எரிச்சலான மோடி, நீங்கள்லாம் அலுவலகத்துக்கு வந்தே ஆக வேண்டும் என்று, பிரதமர் அலுவலகம் மூலம் அவர்களுக்குத் தகவல் கொடுக்கச் சொல்லிவிட்டதாகக் கூறுகின்றனர். இதனால் மத்திய அமைச்சர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT