Skip to main content

இதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி? இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

இந்த வாரம் கரோனா குறித்த இந்தியாவின் போராட்டத்தில் மிக முக்கியமான வாரமாக இருக்கப் போகிறது என்கிறார்கள் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள். அவர்களது மதிப்பீட்டின்படி இந்தியாவில் கேரளமும், மகாராஷ்டிராவும் முதல் கட்ட நோய் நிலைமையைத் தாண்டி இரண்டாவது கட்ட நோய் பரப்பு நிலையை விரைவில் எட்டிப்பிடிக்கும் என எச்சரிக்கிறார்கள்.

முதல்கட்ட நோய் பரப்பு நிலை என்பது வெளிநாட்டில் இருந்து வரும் தொற்று. அது உலகமெங்கும் இப்பொழுதும் குறையவில்லை. கரோனாவை உள்நாட்டு அளவில் கட்டுப்படுத்திய சீனாவில் கூட வெளிநாட்டில் இருந்து வரும் தொற்று இப்பொழுதும் பரவிக் கொண்டிருக்கிறது. அதன் அடுத்தக் கட்டம்தான் சமூக தொற்று எனப்படும் உள்நாட்டு தொற்று. இதைக் கட்டுப்படுத்தத்தான் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

kerala



அதையும் தாண்டி கேரளாவிலும் மகாராஷ்டிர விலும் உள்நாட்டு தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணமாக கோவிட்-19 பற்றிய பரிசோதனைகள் இந்தியாவில் போதுமானதாக இல்லை என்கிறார்கள். இந்த பரிசோதனைகளுக்கு இந்தியா முழுவதும் 7 லட்சம் டெஸ்டிங் உபகரணங்கள் தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள விநியோகஸ்தர்களுடன் தொடர்பில் இருக்கும் எந்த நாட்டை சேர்ந்த உற்பத்தியாளரும் இதனை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அளிக்கலாம். இந்த கோவிட் 19 பரிசோதனை உபகரணங்கள் சென்னை உள்பட பெருநகரங்களில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி மூலம் விநியோகிக்க ஏப்ரல் முதல் வாரம் முதல் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு காரணம் இந்தியாவில் கோவிட்19க்கான பரிசோதனைகள் மிக மிக குறைவாக நடைபெறுகிறது என உலக சுகாதார மையம் இந்திய அரசை குற்றம் சாட்டுவதுதான். மொத்தம் 5342 பேரை சோதனை செய்த கேரளம்தான் இந்தியாவிலேயே அதிகப் பேரை கோவிட் 19 சோதனைக்குள்ளாக்கிய மாநிலம். அதில் 3768 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது.

 

modi



சந்தேகப்படுபவர்களையெல்லாம் கேரளாவில் சோதனை செய்கிறார்கள். இதுவே போதாது என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அங்கே 1437 பேருக்கு ரிசல்ட் இன்னமும் வரவில்லை. அதற்கு காரணம் இந்த கோவிட் 19 சோதனை பற்றிய இறுதி முடிவை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சிக் கழகம் எடுக்க வேண்டும். அதில் ஏற்படும் தாமதம் தான் என்கிறார்கள்.


இந்தச் சோதனையில் கோவிட்19 பாதித்தவர்கள் எனக் கேரளம் கண்டுபிடித்தவர்களின் 137. கேரளாவுக்கு அடுத்தப்படியாக 2731 பேரை சோதனைக்குள்ளாக்கிய கர்நாடகத்தில் 2432 பேருக்கு கொரோனா இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. 55 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாகக் கர்நாடகம் கண்டு பிடித்துள்ளது.

ஐயாயிரத்திற்கும் அதிகமானப் பேரை சோதனைக்கு உட்படுத்தியதால்தான் கேரளா 137 பேரை கோவிட் 19 நோயாளிகள் எனக் கண்டுபிடித்தது. வெறும் 2731 பேரை சோதனைக்கு உட்படுத்திய கர்நாடகம் 55 பேரை கோவிட் 19 நோயாளிகள் எனக் கண்டுபிடித்தது. எனவே அதிகமான நோயாளிகளைக் கண்டுபிடிக்க அதிக அளவிலான சோதனைகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அதிக சோதனைகள் நடத்தாத மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகியவை இடம் பெறுகிறது என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.


26 மார்ச் 2020 அன்று பெற்றப்பட்ட கணக்கீட்டின்படி ஆந்திரா மிகக் குறைவாக 360 பேருக்கு மட்டும் கோவிட் 19 பரிசோதனையைச் செய்துள்ளது. அடுத்தப்படியாக தமிழகத்தில் 962 பேருக்கு மட்டும் கோவிட்19 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 77 பேருக்கு ரிசல்ட் வரவில்லை. 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஆந்திரா, தமிழ்நாட்டை விட அதிகமாக 1319 பேருக்கு பரிசோதனைகள் நடத்தியுள்ளது. அதில் 45 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளதாகக் கண்டுபிடித்துள்ளது என சுட்டிக்காட்டுகிறார்கள் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள்.

அதுமட்டுமல்ல கோவிட்19 வைரஸை சீனா எப்படி எதிர்கொண்டது என இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தனியார் மருத்துவ மனைகளையும் மருத்துவர்களையும் கொரோனா ஒழிப்பிற்கு தயார் படுத்த வேண்டும். உள்ளாட்சித் துறை, குடிநீர் வழங்கும் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை உள்பட அனைத்து துறைகளையும் கோவிட்19 வைரஸ்க்கு எதிரான போரில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறையும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் சொல்லும் அனைத்தையும் இந்தியாவில் ஒழுங்காகச் செய்த மாநில அரசு ஒன்றுக்கூட இல்லை என விரத்தியுடன் சொல்லும் மத்திய அரசு அதிகாரிகள் ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல. நிலைமை இப்படியே போனால் சமூக தொற்று எனப்படும் இரண்டாம் நிலை நோய்த் தொற்றை இந்தியாவில் தவிர்க்கவே முடியாது என்கிறார்கள்.

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார்.