ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரபடுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக கட்சியின் தலைவர்கள், அவர்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் உள்ள சீலயம்பட்டி பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்கள், “ஐயா 12வது பாஸ் போடுங்க ஐயா..” என கோஷங்களை எழுப்பினர். அதற்கு ஓ.பி.எஸ்., “உங்கள் உற்சாகம் என்னவென்று எனக்கு புரிகிறது. விரைவில் முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
Show comments