ADVERTISEMENT

கட்சியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு...  கூண்டோடு ராஜினாமா செய்த அதிமுகவினர்!

04:23 PM Feb 03, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிந்து தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பல கட்டங்களாக வேட்பாளர் பட்டியல்களை முன்னணி அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் தேனியில் அதிமுக வார்டு செயலாளர் உள்ளிட்டோர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஆறாவது வார்டு அதிமுக செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக உறுப்பினராக இல்லாதவர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு வழங்கியதாக கூறி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதற்கான முடிவை எடுத்துள்ளனர். பெரியகுளம் நகராட்சி 6வது வார்டில் ராஜினாமா செய்தோர் சார்பில் சுயேச்சையாக லட்சுமி என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT