Skip to main content

தேனியில் நான்கு ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றிய ஓபிஎஸ்! ஒரு ஒன்றியத்தை பிடித்த திமுக!!

Published on 12/01/2020 | Edited on 12/01/2020

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிமுகவினர் மாவட்ட கவுன்சிலரில் பெரும்பான்மையாக வந்ததால் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அண்ண பிரகாஷின் மனைவி ஈஸ்வரிக்கு கொடுப்பதாக ஓபிஎஸ் உறுதி அளித்திருந்தார்.

 

theni local election result

 

ஆனால் அண்ண பிரகாஷ் டிடிவி அணியில் இருந்து மீண்டும் அதிமுகவுக்கு வந்தவர் என்று அதிமுகவினர் சிலர் ஓபிஎஸ்சிடம் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அண்ண பிரகாஷ் மனைவிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கொடுக்க ஓபிஎஸ் மறுத்துவிட்டு தனது போடி தொகுதியில் உள்ள சில்லமரத்துப்பட்டி மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பிரிதாவுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் கொடுத்தார். இதனால் டென்ஷன் அடைந்த ஈஸ்வரி வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டு அழுதுகொண்டே வெளியேறினார். அப்படியிருந்தும் பெரும்பான்மையாக அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் இருந்ததால் மாவட்ட ஊராட்சித் தலைவராக போட்டியின்றி  பிரிதா தேர்வு செய்யப்பட்டார். 

 

theni local election result


ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு யூனியன்களில் அதிமுக கூட்டணி ஆண்டிபட்டி, கம்பம், போடி, உத்தமபாளையம் ஆகிய நான்கு ஒன்றியத்தை கைப்பற்றியது. அதன்மூலம் ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவராக லோகிராஜன், போடி ஒன்றிய தலைவராக சுதாவும், உத்தமபாளையம் ஒன்றியத் தலைவராக ஜான்சியும், கம்பம் ஒன்றியத் தலைவராக அதிமுக கூட்டணி கட்சியிலுள்ள பிஜேபியை சேர்ந்த பழனி மணியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

 

theni local election result


ஆனால் ஓபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் தேனி ஒன்றியம் வருகிறது. அப்படி இருந்தும் அந்த தேனி ஒன்றியம் திமுகவுக்கு சாதகமாக இருந்து வந்ததால் அந்த தேனி ஒன்றியத்தில் பெரும்பான்மையான திமுக  ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதின் மூலம்  திமுக ஒன்றிய செயலாளரான  சக்கரவர்த்தி தேனி ஒன்றிய தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த அளவுக்கு ஓபிஎஸ் தொகுதியில் உள்ள தேனி ஒன்றியத்தையே திமுக கோட்டையாக்கி இருக்கிறார் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய சேர்மனுமான சக்கரவர்த்தி.
 

அதுபோல் சின்னமனூர். பெரியகுளம் ஒன்றியங்களில் ஆளுங்கட்சியை விட எதிர்கட்சியான திமுக தலா ஒரு சீட்டுகள் கூடுதலாகப் பெற்று அதன் மூலம் ஒன்றிய தலைவர் பதவிகளை தக்க வைக்க இருந்தது. ஆனால் இந்த விஷயம் ஓபிஎஸ் காதுக்கு எட்டவே சின்னமனூர் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதியும், பெரியகுளம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் செல்வத்தையும் பேரம்பேசி தன் பக்கம் இழுத்து கொண்டதால் பெரியகுளம் சின்னமனூர் ஒன்றியத்தில்  திமுகவும், அதிமுகவும் சமநிலையில் இருந்தது. 

 

theni local election result


அதுபோல் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் அதிமுகவும், திமுகவும் சமநிலையில் இருந்தது. இதனால் இந்த மூன்று ஒன்றியங்களிலும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தலைவர் பதவிகளை தக்க வைக்க ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு ஒன்றிய கவுன்சிலர்களை தூக்க முயற்சி செய்தும் கூட பலன் அளிக்கவில்லை. அதனால் மூன்று ஒன்றிய தலைவர் தேர்தல் பதவிக்கு  எதிர்க்கட்சி திமுக கவுன்சிலர்கள் வந்தும் கூட பெரும்பான்மை இல்லாததாலும் அதிமுக கவுன்சிலர்கள் வராததாலும் தேர்தல் நடத்த முடியாது என கூறி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்தி வைத்து விட்டார்.

இதனால் டென்சன் அடைந்த திமுகவினர் ஆளுங்கட்சியை கண்டித்து  போராட்டத்தில் குதித்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர்  கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் உ.பி.கள் பெருந்திரளாக கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை எழுப்பினார்கள். அதை கண்டு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருந்தாலும் மாவட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஓபிஎஸ் தரப்பு  பெரும்பான்மையாக வெற்றி பெற்று பதவிகளை தக்க வைத்துக் கொண்டனர். அப்படி இருந்தும் ஓரளவுக்கு திமுக மாவட்டத்தில் அங்கங்கே வெற்றி பெற்றும் கூட  ஆளுங்கட்சியின் அதிகார, பண பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பதவிகளை தக்கவைக்க திணறி வருகிறார்கள்.

 


 

 

 


        

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.