அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சி. கவுசிக் என்பவர் நேற்று விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஆட்சியர், வேட்பாளர் கவுசிக்கை உறுதிமொழி படிவத்தை வாசிக்க சொன்னார். ஆனால் தனக்கு தமிழ் தெரியாது என்று வேட்பாளர் கவுசிக் கூற, அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வாசிக்க அதனை கவுசிக் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் மேலக்கலங்கலைச் சேர்ந்த மருத்துவரான கவுசிக். நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கவுசிக்கின் பெற்றோர்கள் வட மாநிலத்தில் வசித்து வருகின்றனர். அதனால் கவுசிக்கும் அங்கேயே படித்ததால் அவருக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும்; வாசிக்க தெரியாது என்று கூறப்படுகிறது.