ADVERTISEMENT
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 35ஆவது அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பணி சிறக்க, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று மதியம் அண்ணாசாலையில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். மேலும் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
Show comments