ADVERTISEMENT

உத்தரபிரதேச அரசுக்கு எதிராக மகிளா காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

02:38 PM Oct 03, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று (02.10.2020) உத்தரபிரதேச மாநில சிறுமி மனிஷியா பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், ராகுல் காந்தியை தாக்கிய காவல்துறையை கண்டித்தும் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவன் வாசலில் மகிளா காங்கிரஸ் தலைவி சுதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் படங்களை கிழித்தும், உருவ பொம்மையை எரித்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். பின்னர் சாலையில் அமர்ந்து மரியலில் ஈடுபட முற்பட்டபோது காவல்துறையால் கைதுசெய்யப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT