Skip to main content

உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜ.க.வை வீழ்த்த புதிய வியூகம் வகுத்த காங்கிரஸ்!

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

uttarpradesh assembly election bjp with congress

 

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரைக் களமிறக்காததால் இரு கட்சிகளிடையே மறைமுகக் கூட்டணி உள்ளதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 

 

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது உத்தரபிரதேச மாநிலம். கடந்த 1989- ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மீண்டும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 114 தொகுதிகளில் போட்டியிட்டு 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. 

 

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் 6.25%- லிருந்து 5.4% ஆக குறைந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சி புதிய நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. உத்தரபிரதேச பா.ஜ.க. மீதான எதிர்ப்பு மனநிலை விவசாயிகள் போராட்டம், பெண் வேட்பாளர்களை முன்னிறுத்தி மேற்கொள்ளும் பரப்புரை போன்றவற்றோடு, சிறுபான்மையினர், பட்டியலினத்தனர்களின் வாக்குகள் தங்களுக்கு கைகொடுக்கும் என நம்புகிறது காங்கிரஸ்.

congress

அதே நேரம், பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக இருக்கும் சமாஜ்வாதி கட்சிக்கு மறைமுகமாக உதவி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கடந்த முறை பா.ஜ.க.வின் வெற்றிக்கு பங்கு வகித்த ஓபிசி பிரிவு தலைவர்கள், அண்மையில் பா.ஜ.க.வில் இருந்து சமஜ்வாதிக்கு தாவியதுப் போது கூட, காங்கிரஸ் கட்சி இதனை விமர்சிக்கவில்லை. 

 

அதேபோல, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதியில், அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களை வென்றது. கூட்டணி அமைத்து போட்டியிட்டதே தோல்விக்கு காரணம் என்றும், இந்த தேர்தலிலும் அந்த நிலை தொடர வேண்டாம் என்ற எண்ணத்தில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றன. 

 

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்றும் கருதப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.