ADVERTISEMENT
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாப்பூர் பகுதி 171வது வார்டில் போட்டியிடும் கீதா முரளி, 124 வது வார்டில் போட்டியிடும் விமலா கிருஷ்ணமூர்த்தி, 125 வது வார்டில் போட்டியிடும் ரேவதி ஆகிய திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று மயிலாப்பூர் தெற்கு கேசவபெருமாள் புரத்தில திமுக எம்.பி. கனிமொழி வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில், உடன் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments