ரஜினி ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புறேன், ஆதரவு என்பது கேட்டு பெற வேண்டியது அல்ல. ஆதரவு என்பதை அவர்களே கொடுக்க வேண்டும், இப்போதுவரை தனித்து போட்டியிட முடிவு. 3ம் அணி உருவாகும் என நான் சொல்லவில்லை, எங்களுடன் இணைய அழைப்புவிடுத்தோம். எங்களுடன் நேர்மையானவர்கள் வந்துசேர வேண்டும். இதில் சுயநலம் ஏதும் இல்லை. மக்கள் நீதி மய்யத்தின் பலம் மக்கள்தான் மக்கள் நலன் கருதி உழைத்து வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியினர் விருப்பமனு அளிப்பது குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும்.