ADVERTISEMENT

ஓபிஎஸ் மீதிருக்கும் மதிப்பினால்  அவரை விமர்சனம் பண்ண விரும்பவில்லை  - ஜெயக்குமார் 

06:25 PM Aug 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை முடிக்காததை கண்டித்து அண்ணா தொழிற்சங்க பேரவையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓ. பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு 'அவரின் மீது மதிப்பிருப்பதால் விமர்சனம் பண்ண விரும்பவில்லை' எனக் கூறியுள்ளார்.


இது குறித்து மேலும் பேசிய அவர், "ஓ.பன்னீர் செல்வம் அணியில் 80% பேர் இல்லை மொத்தமே 80 பேர்தான் உள்ளனர். அனைவருக்கும் மாபெரும் சக்தி யார் என்பது தெரியும். இன்றைக்கு ஒற்றைத் தலைமையின் கீழ் அனைத்திந்திய அண்ணா திமுக வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் மீது மிகுந்த மதிப்பு இருப்பதால் அவரை விமர்சனம் பண்ண விருப்பம் இல்லை" எனக் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT