இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, இந்தமுறை அதிகாரிகளின் மனநிலையே வேறமாதிரி மாறிவிட்டதாக கூறினர்.அரசு ஊழியர் சங்கங்களின் பிரமுகர்கள், தங்கள் தேர்தல் அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகிட்டனர், எல்லா வகையிலும் நம்மை நசுக்கிய ஆளும் கட்சிக்கு நாம் பாடம் புகட்டணும்னு நினைச்சோம். வாக்குப்பதிவில், ஆளுந்தரப்பின் முறைகேடு நடவடிக்கைகளை முடிஞ்ச அளவு தடுத்துட்டோம். சாயங்காலம் 6 மணிக்கு மேல் கட்சியோட பூத் ஏஜெண்டுகள் வீட்டுக்குப் போறதிலேயே கவனமா இருந்தாலும், நம்மளால முடிஞ்ச அளவுக்கு எதிர்ப்புணர்வைக் கொஞ்சம் கொஞ்சம் பதிவு செஞ்சிட்டோம்னு சொல்லிச் சிரிச்சிருக்காங்க.
இதெல்லாம் எடப்பாடி கவனத்துக்குப் போயிருக்கு. அதனால் ரெண்டு நாளைக்கு முன், அரசு ஊழியர்களுக்கு மூன்று சத அகவிலைப்படி கொடுப்பது பற்றி, நிதித்துறைச் செயலாளர் சண்முகம், அவர்கிட்ட ஆலோசிச்சப்ப, அரசு ஊழியர்கள் தி.மு.க.வுக்குத்தானே ஓட்டுப் போட்டிருப்பாங்க. அப்புறம் எதுக்கு நம்மகிட்ட அகவிலைப் படியை கேட்கணும்னு எரிஞ்சி விழுந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.