நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் சூலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், அதிமுக ஆட்சி குறித்தும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்தும் பேசினார். அவர் பேசுகையில்,
ADVERTISEMENT
இன்றைக்கு இருப்பது மெஜாரிட்டி ஆட்சியா, இல்லை மைனாரிட்டி ஆட்சி. நாம 97 இந்த 22ம் சேர்ந்தா 119. நமக்கு மெஜாரிட்டிக்கு 118 இருந்தா போதும்ல, நாம 119 வந்துரோம்ல, அப்போ யாரு ஆட்சி, நாமதான் ஆட்சி. நான் கணக்கு பண்ண மாட்டேன், கணக்குதான் போடுவேன். அதெல்லாம் வேலுமணிதான் கணக்கு பண்னிட்டு இருப்பாரு. நம்பர் ஒன்னுங்க, கிரிமினல்ல, அயோக்கியன்ல, லஞ்சத்துல, கரெப்ஷன்ல, கமிஷன்ல, கலெக்ஷன்ல நம்பர் ஒன்னு யாருனு கேட்டா, அந்த ஊழல்மணிதான். அடுத்த வேலையா எல்லாரும் பதவி விலக போறிங்க. முதல் வேலையா, முதல் ஆளா ஜெயிலுக்கு போகப்போறது இந்த ஊழல்மணிதான் என்று கூறினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments