Skip to main content

எடப்பாடி தொண்டரல்ல... ஜெ.வுக்கு பணம் வசூலித்து கொடுத்த ஐவரில் ஒருவர்- ஸ்டாலின் பிரச்சாரம்

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் பரப்புரையில் ஈடுபட்டதிமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,   

எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஆகவே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுக ஆட்சியை அழிக்க முடியாது. அவர் கனவு காண்கிறார் என்று சொல்கிறார். நான் கனவெல்லாம் காணவில்லை, கனவு காண வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. விரைவில் பாருங்கள் நனவாக நடக்கப் போகிறதா என்று பாருங்கள். பிஜேபி ஆட்சி ஒத்துழைப்போடு இந்த ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது இதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. இதுதான் இப்போது இருக்கக்கூடிய உண்மை. இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்கு, இந்த ஆட்சியை நீடித்து நிலைத்து வைத்திருப்பதற்காக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், மக்களை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை அவங்களுடைய கவலைகள் எல்லாம் ஆட்சியை எப்படியாவது காப்பாத்தணும் அதற்காக அங்கே இருக்கக்கூடிய ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு மாசம் மாசம் படியளந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல மாதம் மாதம் ஆளும் கட்சியை எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்ல அமைச்சர்களுக்கும் படியளந்து கொண்டிருக்கிறார்கள்.

dmk leader stalin election campaign


அப்படி படியளக்க வேண்டும் என்றால் எப்படி முடியும். அதற்கு ஊழல் செய்ய வேண்டும், லஞ்சம் வாங்க வேண்டும்,  கொள்ளையடிக்க வேண்டும். அரசியல் செய்யனும், கமிஷன் வாங்கணும் இதையெல்லாம் செய்து பொதுப்பணித்துறையில், நெடுஞ்சாலைத்துறையில், உள்ளாட்சித் துறையில் இப்படி எல்லாத் துறைகளையும் பர்சன்டேஜ் வச்சு, கமிஷன் வச்சு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இதே முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி மீது ஹைவேஸில் பொதுப்பணித்துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கு. அவருக்கு வேண்டிய, அவரது சம்பந்திக்கு வேண்டிய  ஒருவர் செய்யாதுறை அவருக்கு எல்லா ஒப்பத்தந்தையும் கொடுத்து இவ்வளவு கமிஷன், இவ்வளவு பர்சன்டேஜ், இவ்வளவு லஞ்சம், ஊழல் நடந்திருக்கு.

அதேபோல்தான் சேலம் எட்டு வழிச்சாலை, 8 வழி சாலை என்பது தேவை தான். நான் மறுக்கவில்லை அபிவிருத்திகள் வந்தாகணும். வளர்ச்சிகள் நாட்டுக்கு வரணும். டி ஆர் பாலு என்னுடன் வந்திருக்கிறார். அவரும் அந்தத் துறையில் மத்தியிலே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அவர் எத்தனையோ சாலைகளை இந்தியா முழுக்க அமைத்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் பல சாலைகளை அமைத்து இருக்கிறார், விரிவாக்கம் செய்து கொடுத்திருக்கிறார். அப்போதெல்லாம் எங்காவது எந்த பிரச்சனையும் வந்து இருக்கா? காரணம் என்னவென்றால் அங்கே இருக்கக்கூடிய மக்களிடத்தில் கலந்து பேசி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு விவசாயிகளுக்கு, மக்களுக்கு எந்த துன்பமும் தொல்லைகளும் வரக்கூடாது என்பதை எல்லாம் திட்டமிட்டு சாலைகளை மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பணிகளை நாம் செய்தோம். ஆனா இன்னைக்கு பல எதிர்ப்புகள், தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை காரணம் கமிஷன் வாங்குவதையும், கொள்ளை அடிப்பதில் குறியாக இருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி இந்த ஆட்சி கவலைப்படவில்லை.

இந்த லட்சணத்துல அவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார். என்ன பேசினார் என்று நானும் ஒரு குறிப்பு எடுத்துக் கொண்டு தான் வந்து இருக்கேன். ஏனென்றால் இல்லாத பொல்லாததையும் சொல்லி விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக. ஏனென்றால் நான் கலைஞருடைய மகன் எதையும் ஆதாரத்தோடு தான் பேசுவேன். வாய்க்கு வந்த படியெல்லாம் பேசிட்டு போகக்கூடாது.

அவர் சொல்லுகிறார் நான் ஒரு தொண்டன், தொண்டனாக இருக்கக் கூடியவன் இன்று முதலமைச்சராக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். நான் கேட்கிறேன் ஒரு தொண்டராக இருந்த இவர் எத்தனை முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார், எம்பியாக இருந்திருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எல்லாம் பணத்தை எல்லாம் வசூல் பண்ணி கொள்ளையடித்து கொடுக்க ஒரு ஐந்து பேர் இருப்பார்கள். அந்த ஐந்து பேரில் இவரும் முக்கியமான ஒருத்தர்.  ஜெயலலிதா மறைந்த உடனே ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக உட்கார்ந்தார். ஓபிஎஸ் முதலமைச்சராக வந்து அமர்ந்த பொழுது அவரை மாற்றிவிட்டு சசிகலா என்ன செய்தார் என்றால் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கினார்கள். ஏனென்றால் அவர்தான் கமிஷனை கரெக்டாக கொடுப்பார் என்று அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள். செய்யாதுரை அதேபோல் சேகர்ரெட்டி இவர்கள் வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்திருக்கு. அவர்கள் வீட்டில் ரெய்டு நடந்ததெற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் இவருடைய பணம் தான். இவர் கொள்ளையடித்து குவித்து வைத்து இருக்கின்ற அந்த ஊழல் பணம் தான். இதுதான் இன்று இருக்கக்கூடிய உண்மை.

நாம் 38 தொகுதியிலும் முட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியதாக எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். அதற்கு கூட நான் பதில் சொன்னேன். சரி நாங்கள் 38 தொகுதிகளில் முட்டாய் கொடுத்தோம் எனில் தேனியில் நீங்கள் எப்படி வென்றீர்கள் அல்வா கொடுத்து வென்றீர்களா  என கேட்டேன் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.