ADVERTISEMENT
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டு ஆண்டுகள் வெற்றிக்கொடிகளை நாட்டி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுகவின் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தன் கட்சிக்காரர்களை மட்டுமல்லாமல் கூட்டணி கட்சி கட்சிக்காரர்களையும் அரவணைத்து செல்கின்ற பாங்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
Show comments