ADVERTISEMENT

3 எம்.எல்.ஏ.க்களை தட்டி தூக்கிய எடப்பாடி! பரபரப்பு பின்னணி! 

12:36 PM Jul 08, 2019 | Anonymous (not verified)

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு இந்த மூணு பேரையும் பதவி நீக்கம் செய்யும் நோக்கத்தில், சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இப்ப அவங்களை அ.தி.மு.க.வில் சேர்த்தது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைத்தேர்தலுக்கு முன்பு அரசுக்கு எதிரா நம்பிக்கையிலாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டா என்ன பண்றதுன்னு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான இந்த மூணுபேரையும் பதவி நீக்கம் செய்து, சபையின் டோட்டல் வேல்யூவைக் குறைக்க அப்படி யொரு முடிவை ஆளும்கட்சி எடுத்துச்சு.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அடுத்து நாடாளுமன்றத் தேர்தலோடு நடந்த 22 தொகுதிகளின் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 9 எம்.எல்.ஏ.க்கள் கிடைச்சதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த பயம் எடப்பாடி அரசுக்குப் போயிடுச்சி. இந்த நிலையில் இப்ப ஓ.பி.எஸ். தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்யணும்னு தி.மு.க. தொடர்ந்த வழக்கு அ.தி.மு.க.வை நெருக்கடியில் நிறுத்தியிருக்கு. இந்த வழக்கில் ஒருவேளை நெருப்பு தீர்ப்பு தங்களுக்கு வந்தா என்ன பண்ணுறதுங்கிற யோசனையுடன், தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களை, இப்ப தடபுடலா வரவேற்குது எடப்பாடித் தரப்பு.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT