இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எனக்கு பாதிப்பு வரப் போகிறது. என்னுடைய சந்ததிகள் கேள்விக்குறியாக வந்து நிற்கிறார்கள் என்று எண்ணி அறவழிப்போராட்டத்தில் நிற்க்கும் போது அதற்கு சரியான முறையில் விளக்கம் அளிக்காமல், அந்த போராட்டத்தை கலைப்பதையே நோக்கமாக வைத்திருப்பது ஏற்ப்புடையது அல்ல. போராட்டக்காரர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய பொறுப்பு முதல்வருக்கும் துணைமுதல்வருக்கும் இருக்கிறது. அதை விடுத்துவிட்டு போராட்டத்தை எதிர் கட்சிகள் தூண்டி விடுகின்றன என்று நீங்கள் கூறுவதை ஒரு அரசியலாகத்தான் பார்க்கிறேன். உங்களுக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனையை காதுகொடுத்து கேளுங்கள். ஒவ்வொரு முறையும் மக்களின் அறவழிப் போராட்டம் வன்முறையில் முடிந்ததைத்தான் வரலாறாகப் பார்க்கிறோம். தூத்துக்குடியில் நடந்ததை வண்ணாரப்பேட்டையில் நடத்திவிடாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.