ADVERTISEMENT
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அரும்பாக்கம் ‘அண்ணா ஆர்ச்’ அருகே ஏர் கலப்பை பேரணி நடத்தினர்.
ADVERTISEMENT
மாவட்டத்தலைவர் க.வீரபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கலந்து கொண்டார். போராட்டத்தின்போது நெற் பயிர்களை கீழே கொட்டி, மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் சாலை மறியல் செய்ய முற்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Show comments