இதனையடுத்து பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை ரஜினிகாந்த் பரப்பி வருவதாக, அவர் மீது சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்வதற்கு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், மனு தள்ளுபடியானது.
மேலும் ஒரு வாரத்திற்கு பிறகு புகார்கள் மீது காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று திராவிட கழகத்தினர் தெரிவித்தனர். இதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல கதை இதுதான் என்றும், கத்தி, கழி போன்ற ஆயுதங்களுடன் சேலத்தில் ஈ.வெ.ரா ஆபாச ஊர்வலம் நடத்தியதும் அது தொடர்பாக கருணாநிதியின் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் கண்கூடு. திக போன்ற வன்முறை இயக்கங்களும் அவர்களின் அரசியல் கரமாகத் திகழும் திமுக வும் அரசியல் தளத்திலிருந்து அப்புறப் படும் என்றும் கூறியுள்ளார்.