ADVERTISEMENT

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர்!

06:51 PM Apr 07, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஒருவர் பாஜகவில் தன்னை இணைத்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் கிரண்குமார் ரெட்டி. இவர் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகு சமக்கிய ஆந்திரா என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.

ஆந்திர மாநிலம் முழுவதும் தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT