கர்நாடகா தேர்தல் வாக்குபதிவு இன்று காலை தொடங்கியது. ஏற்கனவே களத்தில்அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு வாக்குகள் சேகரித்தன. இதில் தேசிய கட்சிகளின் கருத்து மோதல் காட்சிகள் அவர்களுக்குகர்நாடகா தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டியது.இதற்கிடையில் வேட்பாளர் பெயர், கருத்து என பலவற்றில்அவர்களுக்குள்ஏற்பட்ட குழப்பங்கள் அதிர்ச்சியையும், சிரிப்பையும் வரவழைத்தது. இப்படி ஒரு வழியாக பிரச்சாரங்கள் முடிந்து இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் இரண்டு தேசிய கட்சிகளை சேர்ந்தவர்களும் ட்விட்டரில் #Vote4ChangeVote4BJP, #KarnatakaVotesForCongressட்விட்டரில் ஹேஸ் டேக் உருவாக்கி தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இவை இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.