ADVERTISEMENT

10 நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு... போலீசார் குவிப்பு!

11:14 AM Jul 21, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களுக்குப் பின் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகர் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வின் பொழுது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் இருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT