நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், நேற்று இரவு உயிரிழந்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வராக யார் பதவியேற்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான மகராஷ்டிரவதி கோம்ண்டக் கட்சி (MGP) சட்டமன்ற உறுப்பினரான சுதின் தவாலிகர், முதலமைச்சராக முயற்சிகள் செய்தார். தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்நிலையில் கோவா பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் அம்மாநில முதலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை இத்தற்கான பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Show comments