காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புட்காம் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.
ADVERTISEMENT
கடந்த வாரம் பயிற்சி பெற்ற நான்கு பயங்கரவாதிகள் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்டதால், பாதுகாப்பு படையினர் பதிலடி நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments