ADVERTISEMENT

புனித் ராஜ்குமார் மறைவு: மாரடைப்பால் இருவர் மரணம்... ஒருவர் தற்கொலை!

10:48 AM Oct 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கன்னட சினிமா நட்சத்திரமான புனித் ராஜ்குமாருக்கு நேற்று (29.10.2021) காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் புனித் ராஜ்குமாரின் ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சியடைந்தனர்.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். மேலும், அவரது உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தநிலையில், புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது ரசிகர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், புனித் ராஜ்குமாரின் ரசிகரான ராகுல் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது வீட்டில் இருந்த புனித் ராஜ்குமாரின் உருவப்படத்திற்கு மலர்களால் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைத்தவிர சதீஷ் என்ற மற்றொரு ரசிகர், புனித் ராஜ்குமார் மறைந்த வேதனை தாங்காமல், தனது உள்ளங்கையை நசுக்கிகொண்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT