ADVERTISEMENT

பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து; சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த சோகம்

09:51 AM Jan 03, 2024 | mathi23

சுற்றுலா பேருந்து மீது லாரி மோதியதில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அஸ்ஸாம் மாநிலம், பாலிஜானில் இருந்து அத்கேலியா பகுதியை நோக்கி 45 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து இன்று (03-01-24) அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மோதியதில் சுற்றுலா பேருந்தில் இருந்த 45 பயணிகளில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

இதனை கண்ட அங்கிருந்தவர்கள், பேருந்தில் இருந்த காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக படுகாயமடைந்த 27 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT