ஜம்மு காஷ்மீரில் காவல் துறை அதிகாரியை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் மூன்று பேரை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக காவலர் முகமது சலீம் விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் அவரது சடலம் ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குல்காம் பகுதியில் காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப் ஆகிய படைகளின் வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை நடத்தினர். பலமணிநேரம் நடந்த இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments