ADVERTISEMENT

இந்தியாவில் மேலும் ஒரு நபருக்கு ஒமிக்ரான்..!

03:07 PM Dec 04, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கரோனா, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிவருகிறது. இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த இருவரில் ஒருவர் தென்னப்பிரிக்காவைச் சேர்ந்தவர். இன்னொருவர் அம்மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்.

இந்தநிலையில், தற்போது மேலும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் கரோனா பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்த நபருக்கு ஒமிக்ரான் கரோனா ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைக் குஜராத் மாநில சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டவரின் மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குஜராத் மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT