Skip to main content

இந்தியாவில் 10-ஆயிரத்தை தாண்டி எகிறிய தினசரி கரோனா பாதிப்பு!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

omicron

 

இந்தியாவில் அண்மைக்காலமாக குறைந்து வந்த தினசரி கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 6,358 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று 9,195 பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஒமிக்ரான் பாதிப்பு 1000-த்தை நெருங்கியுள்ளது. இதுவரை 961 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 320 பேர் குணமடைந்துள்ளனர்.

 

அதிகபட்சமாக டெல்லியில் 263 பேருக்கும், மஹாராஷ்ட்ராவில் 252 பெருக்கும்  ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்