ADVERTISEMENT

திருட போன வீட்டில் படுத்து தூங்கிய திருடன் கைது!

09:03 AM Feb 15, 2020 | suthakar@nakkh…


மராட்டிய மாநிலத்தில் திருட போன இளைஞர் அங்கேயே படுத்து தூங்கியதால் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மும்பையில் வாரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மாலே. அவர் தன் வீட்டிக்கு அடுத்துள்ள வீட்டையும் விலைக்கு வாங்கி அதில் சில பொருட்களை மட்டும் போட்டுவிட்டு அதனை பூட்டியை வைத்துள்ளார். அந்த வீட்டை எப்போதாவது திறந்து பொருட்களை எடுப்பார். இந்நிலையில், நேற்று அதிகாலை பூட்டிய வீட்டில் விளக்கு எரிவதை மாலே பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை திறந்து பார்த்துள்ளார்.


ADVERTISEMENT


அப்போது ஒரு இளைஞர் மெய் மறந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் சில பொருட்களை பேக் செய்யப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அந்த இளைஞர் திருடர் என்பதை உறுதி செய்த அவர், போலிசுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த அவர்கள் இந்த இளைஞரை எழுப்பி கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்ததால் தூங்கியதாக காவல்துறையினரிடம் இளைஞர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT