ADVERTISEMENT

போலி ஈ-வே பில்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பிரத்யேக குழு...

11:54 AM Feb 18, 2019 | tarivazhagan

ஜி.எஸ்.டி வரி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சரக்குப் போக்குவரத்தை எளிமைப்படுத்த மத்திய அரசு ஈ-வே பில் முறையை கொண்டுவந்தது. இதன் மூலம் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு ரூ.50,000 அல்லது அதற்கு மேலான மதிப்புடைய பொருள்களை கொண்டுசெல்லும்போது ஈ-வே பில் கட்டாயமாக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இது கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. இது நடைமுறைக்கு வந்ததில் இருந்தே போலி ஈ-வே பில், போலி இன்வாய்ஸ்கள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இது வரையில் போலி ஈ-வே பில் மூலம் ரூ5,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, போலி ஈ-வே பில் மற்றும் போலி இன்வாய்ஸ்களை கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட பிரத்யேக குழு ஒன்றை அமைக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுவில் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT