gs

ஜி எஸ் டி வரி விதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. மத்திய இணை அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

ஆயிரக்கணக்கானோர் அமர வேண்டிய அரங்கத்தில் சிலர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஜி.எஸ்.டியால் பிரதமர் மோடி பெருமிதம் கொள்கிறார். பாஜகவினரும் பெருமிதம் பேசிவரும் நிலையில் ஜி.எஸ்.டி ஓராண்டு நிறைவு விழாவுக்கு கட்சியினரே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.