ADVERTISEMENT

"அவர்களை தேசவிரோதிகள் என்று அழைத்தால், அரசாங்கம் ஒரு பாவி" - பிரியங்கா காந்தி

11:43 AM Dec 24, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில், விவசாயிகள் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்வார்கள் எனவும், அதன் பிறகு ராகுல் காந்தியும், காங்கிரஸ்ஸின் மூத்த தலைவர்களும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட இரண்டு கோடி கையெழுத்துக்களை குடியரசுத் தலைவரிடம் அளித்து, வேளாண் சட்ட பிரச்சனையில் தலையிடுமாறு வலியுறுத்துவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இருப்பினும், ராகுல் காந்தியின் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி வாங்கியவர்கள் மட்டும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் டெல்லி போலீஸார் கூறியிருந்தனர். இந்தநிலையில் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அனுமதியில்லாமல் தொடங்கப்பட்ட பேரணியை தடுத்து நிறுத்திய போலீஸார், அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தனர். ராகுல் காந்தி குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

பேரணி தடுத்து நிறுத்தியபோது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, விவசாயிகளை தேச விரோதிகள் என அரசாங்கம் அழைத்தால் அரசாங்கம் ஒரு பாவி என குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர், "இந்த அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு கருத்து வேறுபாடும் பயங்கரவாத கூறுகள் கொண்டதாக வகைப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு எங்கள் ஆதரவுகுரலை தருவதற்காக இந்த அணிவகுப்பை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோம், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள். ஜனாதிபதியை சந்திக்க அவர்களுக்கு உரிமை உண்டு. வரை சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அதில் என்ன பிரச்சினை?.

எல்லைகளில் முகாமிட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் குரல்களைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்கள் (பாஜக தலைவர்கள் & ஆதரவாளர்கள்) விவசாயிகளுக்குப் பயன்படுத்தும் பெயர்களைப் பயன்படுத்துவது பாவம். அரசாங்கம் அவர்களை தேசவிரோதிகள் என்று அழைத்தால், அரசாங்கம் ஒரு பாவி. சில நேரங்களில் அவர்கள் நாங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். நாங்கள் எதிர்க்கட்சியாக தகுதி பெறவில்லை என கூறுகிறார்கள். சில சமயங்களில், நாங்கள் ஒரு மாதத்திற்கு எல்லையில் (டெல்லியின்) லட்சக்கணக்கான விவசாயிகளை முகாமிடவைத்துள்ள அளவிற்கு சக்தி வாய்ந்தவர்கள் என கூறுகிறார்கள். நாங்கள் என்ன என்பதை அவர்கள் முதலில் தீர்மானிக்க வேண்டும்" என கூறியுள்ளார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT